Header Logo

ஏனையவை
பெருந்தொகையான போதை மாத்திரைகள் அழிப்பு!

Jul 22, 2025 - 01:09 PM -

0

பெருந்தொகையான போதை மாத்திரைகள் அழிப்பு!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை சுங்கம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான ரெமடோல் (Tramadol) எனும் போதை மாத்திரைகள் புத்தளம், பாலாவியில்  உள்ள இன்சீ சீமெந்து தொழிற்சாலையில் கொழும்பு 6 ஆம் இலக்க நீதிமன்ற நீதிபதி கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் நேற்று (21) அதிக வெப்பநிலை உலையில் இட்டு அழிக்கப்பட்டன.

 

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி சிறுவர்களுக்கும், வயோதிபர்களுக்கு பயன்படுத்தக் கூடிய 'பெம்பஸ்' இறக்குமதி என்ற போர்வையில் குறித்த போதை மாத்திரைகள் மிகவும் சூட்சகமான முறையில் கொள்கலனிற்குள் அடைக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போது இலங்கை சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த போதை மாத்திரைகள் சுமார் இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியுடையது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த கொள்கலன் மீது சந்தேகம் கொண்ட இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து பரிசோதனை செய்த போது, குறித்த கொள்கலனுக்குள் 'பெம்பஸ்' பெட்டிகளை போன்று மிகவும் சூட்சகமான முறையில் ரெமடோல் (Tramadol) போதை மாத்திரைகள் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

 

இருப்பினும், மேற்படி விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட விசாரணையில் எந்தத் தவறும் வெளிப்படுத்தப்படாத தால், போதை மாத்திரைகள் கொண்டுவரப்பட்ட கொள்கலனை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு வழங்க சட்டமா அதிபர் அனுமதி வழங்கியிருந்தார்.

 

இருந்த போதிலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக விசாரணைக்குப் பின்னர், 2023 நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்ட 2360-2021 ஆம் இலக்கம்  கொண்ட அதிவிசேட வர்த்தமானியில், 2021 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நஞ்சு, அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் கீழ் நச்சு மற்றும் ஆபத்தான மருந்துகள் அகற்றுவது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

 

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு பொருள் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், குறித்த கொள்கலனில் காணப்பட்ட ரெமடோல் (Tramadol) போதை மாத்திரைகளை புத்தளம், பலாவியில் உள்ள இன்சி சீமெந்து தொழிற்சாலையில் உள்ள அதிக வெப்பநிலை உலையில் இட்டு அழிப்பதற்கு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title