Jul 23, 2025 - 03:07 PM -
0
தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Techno 2025 நிகழ்வில், இலங்கை பொறியியலாளர் நிறுவகத்துடன் (IESL) மீண்டும் கைகோர்த்திருந்தது. ‘Engineering for a Smart Nation,’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் இலங்கையின் எதிர்காலத்தை தயார்ப்படுத்தும் புத்தாக்கமான பொறியியல் மற்றும் தொழினுட்ப புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் வகையில், முன்னணி கண்காட்சியாக அமைந்திருந்தது.
உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வில், SLT-MOBITEL Group பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான IESL இடம் அனுசரணை காசோலையை கையளித்திருந்தார். அந்நிகழ்வில் SLT-MOBITEL இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்கவும் இணைந்தார்.
2025 ஒக்டோபர் 10 – 12 வரையில் BMICH இல் இந்தக் கண்காட்சி முன்னெடுக்கப்படும். இதில், SLT-MOBITEL இனால் தொழினுட்ப தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் மேம்படுத்தல்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டு விருந்தினர்களுக்கு தொழினுட்பம் மற்றும் இணைப்புத்திறனின் எதிர்காலம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படும்.