Jul 23, 2025 - 04:02 PM -
0
மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய 2025 வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (23) இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து ஐந்து சுவாமிகள் தேருக்கு எழுந்தருளினார்.
ஆறுமுகப்பெருமான் பின்னே வர பரிவார தெய்வங்கள் தேரில் ஆரோகணித்தனர். பல்லாயிரம் பக்தர்கள் கூடி வடம் பிடித்த தொடர்ந்து பிரதட்டை, காவடிகள் என்பனவும் இடம்பெற்றது.
--

