Jul 24, 2025 - 06:41 PM -
0
பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகமலே பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் சிரஸ்தாவெல முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இன்று (24) அப்பகுதியில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன்போது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு வெற்று குண்டுகளுடன் சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைதான சந்தேக நபர், பொத்துவில் 05 பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--