Header Logo
Mogo Academy

கிழக்கு
வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய காசோலை வழங்கி வைப்பு

Jul 28, 2025 - 05:49 PM -

0

வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய காசோலை வழங்கி வைப்பு
Mobitel inner

மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ‘நாடே முதன்மை’ எனும் தொனிப்பொருளிற்கு அமைய, வீடுகள் சேதமடைந்தவர்களின் வீடுகளை புனர்நிர்மாணிப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு 60 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகள் இன்று (28) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் வழங்கப்பட்டன.

 

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்த 216 வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்காக 43.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

இதில் முதற்கட்டமாக, மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு காசோலை வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் பொறியியலாளர் எஸ். வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் வீ. சுகுமாரன், தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலாத்துறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான வனிதா செல்லப்பெருமாள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் செல்வி யதுசாயினி சுதாகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

இதன்போது, பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக 57 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 57 இலட்சம் ரூபாவும், இரண்டாம் கட்ட கொடுப்பனவாக 8 பயனாளிகளுக்கு தலா 40 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara