Header Logo

வடக்கு
புலம்பெயர்ந்து சென்றாலும் எமது பாரம்பரிய கலைகளை காக்க வேண்டும்

Jul 30, 2025 - 05:38 PM -

0

புலம்பெயர்ந்து சென்றாலும் எமது பாரம்பரிய கலைகளை காக்க வேண்டும்

புலம்பெயர்ந்து சென்றாலும் எமது பாரம்பரிய கலைகளை அழியவிடாது கற்பித்து அடுத்த சந்ததிக்கு கடத்தும் உங்கள் முயற்சிகளை நான் பாராட்டி வாழ்த்துகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

 

பிரிட்டனைச் சேர்ந்த நிருத்திய சங்கீத கலைக்கூடத்தில் கல்விகற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய 'சிவமயம் 2025' நிகழ்வு, ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் ஒழுங்குபடுத்தலில் நேற்று (29) மாலை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

 

அதன் நிறுவுனர் திருமதி ஸ்ரீமதி ராதிகா ராலோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரனும், சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தனும் கலந்துகொண்டனர்.

 

பிரிட்டனில் பிறந்து வளர்ந்த கலைக்கூட மாணவர்களின் இசை மற்றும் நடன நிகழ்வுகளைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரை நடைபெற்றது.

 

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டமையை வெகுவாகப் பாராட்டினார். மேலும், ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முழுவதும் இறைபக்திப் பாடல்களை இசைத்தும், அத்தகைய பாடல்களுக்கு நடனங்களும் அரங்கேற்றப்பட்டமையை வாழ்த்திய ஆளுநர், தற்போது எமது ஊர்களில் ஆலயத் திருவிழாக்களில் குத்துப்பாடல்களே அதிகம் இசைக்கப்படுகின்றமை தொடர்பில் வேதனை வெளியிட்டார்.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title