Header Logo

கிழக்கு
காணாமல் போன கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு

Aug 3, 2025 - 11:47 AM -

0

காணாமல் போன கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி, இன்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கனகராசா சரவணன் ஜயாத்துரை பத்மநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

கூலித்தொழிலை மேற்கொண்டு வந்த குறித்த நபர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வழக்கம்போல வேலைக்காக வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர்.

 

இந்நிலையில், குறித்த நபர் கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து, குறித்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title