Aug 3, 2025 - 05:28 PM -
0
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (03) பிற்பகல் 12 மணியளவில் வளாகத்திற்கு வருகை தந்தார்.
வருகை தந்த பிரதமர், வளாகத்தின் பீடாதிபதிகள், துறைசார் நிர்வாகிகள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் பல்கலைக்கழகத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, அவர் இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து, அவற்றை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
--