Aug 4, 2025 - 12:20 PM -
0
இலங்கையின் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான தேசிய போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் வரலாற்றில் முதல் தடவையாக வடமாகாண அணி மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
குறித்த வடமாகாண அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் 12 பேரும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 02 வீரர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 01 வீரரும் அணியில் இடம்பிடித்திருந்தனர்.
குறித்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து மத்திய கல்லூரி வரை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
--