Header Logo

உலகம்
காசாவில் 56 மனிதாபிமான உதவி பணியாளர்கள் உயிரிழப்பு

Aug 4, 2025 - 12:28 PM -

0

காசாவில் 56 மனிதாபிமான உதவி பணியாளர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலிய படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 56 மனிதாபிமான உதவி பணியாளர்கள் உள்ளிட்ட 92 பேர் உயிரிழந்தனர். 

நேற்றைய தினம் மாத்திரம் பொதுமக்களுக்கான நிவாரண பொருட்களுடன் காசாவுக்குள் 36 லொறிகள் மாத்திரமே உட்பிரவேசித்துள்ளதாகவும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களுடனான லொறிகள் காசா எல்லைக்கு வௌியில் தரித்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அங்குள்ள அதிகளவான சிறுவர்கள் பட்டினியினால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

காசா மக்களுக்கு நாளொன்றுக்கு 500 முதல் 700 லொறிகளில் நிவாரணப் பொருட்கள் தேவைப்படுகின்ற நிலையில், குறைந்தளவான லொறிகளே உட்பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

எனவே போரில் இஸ்ரேல் பட்டினையை ஆயுதமாக பயன்படுத்தி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title