Header Logo

விளையாட்டு
இலங்கையில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ள பங்களாதேஷ் மகளிர் அணி

Aug 5, 2025 - 11:47 AM -

0

இலங்கையில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ள பங்களாதேஷ் மகளிர் அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான உத்தியோகப்பூர்வ பயற்சிப் போட்டிகளுக்கான அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச மகளிர் உலக கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தப் பயிற்சி அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலக கிண்ணத் தொடரை நடத்தவுள்ளன. 

இதற்காக இலங்கை தேசிய மகளிர் அணி, பங்களாதேஷ் மகளிர் அணியுடன் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி உத்தியோகப்பூர்வ பயிற்சிப் போட்டியிலும் அதற்கு முன்னர் இலங்கை ஏ அணியுடனான பயிற்சிப் போட்டி ஒன்றிலும் பங்கேற்கவுள்ளது. 

குறித்த போட்டிகளுக்கு முன்னதாக பங்களாதேஷ் மகளிர் அணி எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. 

உலக கிண்ணத் தொடருக்கு முன்னர், பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எவ்வித போட்டிகளிலும் இல்லை என்பதால், இந்த பயிற்சிப் போட்டிகள் அந்த அணி பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. 

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலக கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பெங்களூரில் மோதவுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title