Header Logo

வடக்கு
சமஸ்டி கோரி வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு

Aug 7, 2025 - 07:24 PM -

0

சமஸ்டி கோரி வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சமஸ்டி முறையில் அதிகார பகிர்வு கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அந்தோனியார் புரம் கிராமத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மீள பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை" நோக்கமாகக் கொண்டு மக்கள் அணியின் திரள் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 

கடந்த 3 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நூறு நாள் செயல்திட்டமானது கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து நூறு நாள் செயல் திட்டம், ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (7) வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அந்தோனியார் புரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அப்பகுதி மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title