Header Logo
Mogo Academy

விளையாட்டு
சஞ்சு சம்சனால், சீ.எஸ்.கேவில் இருந்து விலகும் அஸ்வின்?

Aug 8, 2025 - 05:24 PM -

0

சஞ்சு சம்சனால், சீ.எஸ்.கேவில் இருந்து விலகும் அஸ்வின்?
Mobitel inner

தம்மை அணியில் இருந்து விடுவிக்குமாறு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், அணி நிர்வாகத்திடம் கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

2026ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான திட்டங்களை இறுதி செய்வதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. 

சில நாட்களாக, ராஜஸ்தான் ​ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சனின் வெளியேற்றம் தொடர்பில் கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் காப்பாளருக்கு சஞ்சு சம்சன் தகுதியானவர் என பேசப்பட்டு வருகின்றது. 

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்குத் திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. 

9 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற அவர், 7 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தினார். அத்துடன் சி.எஸ்.கே அணியும் பின்னடைவை சந்தித்தமையினால், அஸ்வின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

சஞ்சு சம்சன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக பல வெற்றிகளை பெற்றுள்ளார். அவர் அங்கிருந்து விலகினால் அது சி.எஸ்.கேவுக்கு சிறந்த தேர்வாக அமையும் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. 

அதேநேரம், ராஜஸ்தான் ரோயல்ஸில் அதிக வெற்றிகளை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றிருப்பதால் அவருக்கு அந்த அணிதான் பொருத்தமாக அமையும் என ரசிகர்கள் கருத்து வௌியிட்டு வருகின்றனர். 

இதற்கு மத்தியிலேயே தம்மை அணியில் இருந்து விடுவிக்குமாறு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் அஸ்வின் கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara