Header Logo

விளையாட்டு
சஞ்சு சம்சனால், சீ.எஸ்.கேவில் இருந்து விலகும் அஸ்வின்?

Aug 8, 2025 - 05:24 PM -

0

சஞ்சு சம்சனால், சீ.எஸ்.கேவில் இருந்து விலகும் அஸ்வின்?

தம்மை அணியில் இருந்து விடுவிக்குமாறு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், அணி நிர்வாகத்திடம் கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

2026ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான திட்டங்களை இறுதி செய்வதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. 

சில நாட்களாக, ராஜஸ்தான் ​ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சனின் வெளியேற்றம் தொடர்பில் கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் காப்பாளருக்கு சஞ்சு சம்சன் தகுதியானவர் என பேசப்பட்டு வருகின்றது. 

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்குத் திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. 

9 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற அவர், 7 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தினார். அத்துடன் சி.எஸ்.கே அணியும் பின்னடைவை சந்தித்தமையினால், அஸ்வின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

சஞ்சு சம்சன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக பல வெற்றிகளை பெற்றுள்ளார். அவர் அங்கிருந்து விலகினால் அது சி.எஸ்.கேவுக்கு சிறந்த தேர்வாக அமையும் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. 

அதேநேரம், ராஜஸ்தான் ரோயல்ஸில் அதிக வெற்றிகளை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றிருப்பதால் அவருக்கு அந்த அணிதான் பொருத்தமாக அமையும் என ரசிகர்கள் கருத்து வௌியிட்டு வருகின்றனர். 

இதற்கு மத்தியிலேயே தம்மை அணியில் இருந்து விடுவிக்குமாறு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் அஸ்வின் கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!