Aug 10, 2025 - 01:59 PM -
0
கன்னியாக்குமரி மாவட்டம் இரணியல் அடுத்த நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சுகில். இவர் சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அதே நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியாற்றிய கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மணிமொழி என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் பழக்கம் அதிகரித்தமையினால் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களுடைய காதலை வௌிப்படுத்தி வந்துள்ளனர்.
நாளடைவில் மணிமொழியுடன் நெருக்கமாக இருந்த சுகில் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் உல்லாசமாக இருந்ததன் விளைவாக மணிமொழி கர்ப்பம் ஆகி இருக்கிறார்
அப்போது கரு கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கரு களைப்பும் செய்துள்ளார் சுகில்.
ஒரு கட்டத்தில், திருமணம் செய்து கொள்வதாக கூறி நாகர்கோவில் வரை அழைத்துச் சென்று தன்னுடைய காதலியை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தனியே விட்டு, சுகில் மாயமாகியுள்ளார்.
இதனால் பதறிப்போன, அந்த இளம் பெண் காதலன் சுகில் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை பார்ப்பவர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

