Header Logo

மலையகம்
ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Aug 12, 2025 - 10:50 AM -

0

ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

பலாங்கொட பகுதியில் இருந்து ஹட்டன் பகுதிக்கு கஞ்சா போதைப்பொருள் கொண்டு வந்த சந்தேக நபர் ஒருவரை ஹட்டன் குற்றவியல் பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் நேற்று (11) காலை 06.30 மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் குற்றவியல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

பலாங்கொட பகுதியிலிருந்து ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், டிக்கோயா ஆகிய பகுதிகளுக்கு மரக்கறிகள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியில் இந்தக் கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். குறித்த முச்சக்கர வண்டியை பரிசோதனை செய்தபோது, இந்தப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபர் இப்பகுதிகளுக்கு கஞ்சாவை விநியோகித்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

மேலும், பொலிஸ் மோப்ப நாயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபரால் கொண்டுவரப்பட்ட மற்றொரு தொகை கஞ்சா ஏற்கனவே சில பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என குற்றவியல் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், முச்சக்கர வண்டியையும் இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!