Aug 12, 2025 - 05:14 PM -
0
தொண்டைமான் ஆறு கடல் நீர் ஏரியிலிருந்து இன்று (12) மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்பிடி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த அச்சுவேலி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--