Header Logo

கிழக்கு
மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Aug 13, 2025 - 11:55 AM -

0

மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பிற்கு பாதுகாப்பு அமைச்சர் வருகை தரவுள்ள நிலையில், செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூக செயற்பாடுகளுக்கு எதிராக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று (13) காந்தி பூங்காவில் நடைபெற்றது.

 

தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் அழைப்பை அடுத்து, இன்று காலை 9.00 மணிக்கு காந்தி பூங்காவில் மக்கள் ஒன்றுகூடினர். இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், மட்டு மாநகர சபை முதல்வர், பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

 

போராட்டத்தின்போது, 'முத்தையன்கட்டு இராணுவ முகாமில் படுகொலை செய்யப்பட்ட கபில்ராய்க்கு நீதி வேண்டும்', 'இராணுவமே வெளியேறு, வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம்', 'இராணுவமே வெளியேறு' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

 

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக இன்று நடைபெற்று வருகிறது.

 

பாதுகாப்பு அமைச்சரின் வருகையை முன்னிட்டு, நகரப் பகுதி, காந்தி பூங்கா மற்றும் பழைய கச்சேரி ஆகிய பகுதிகளில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு, முக்கிய சந்திகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title