Header Logo

உலகம்
இஸ்ரேலில் இடம்பெறும் காசா ஆதரவு போராட்டத்தில் பலர் கைது

Aug 17, 2025 - 04:32 PM -

0

இஸ்ரேலில் இடம்பெறும் காசா ஆதரவு போராட்டத்தில் பலர் கைது

காசாவில் இடம்பெற்று வரும் போரை நிறுத்துமாறு கோரி, இஸ்ரேலில் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 11 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டெல் அவிவ் நகரில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றதாக கூறப்படுகின்றது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அயலோன் அதிவேக வீதியையும் மறித்ததாக த டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி வௌியிட்டுள்ளது. 

அதனால் பல ஆபத்தான விபத்துக்களும் ஏற்படவிருந்த நிலையில் பற்றநிலை அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அதிவேக வீதியை மறித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுதவிர குழப்பங்களை ஏற்படுத்தியதாக ஏனைய இருவரும் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

காசாவில் இடம்பெற்று வரும் போரை நிறுத்துமாறு கோரி, இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title