Header Logo

ஏனையவை
வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கைக்கான WFP யின் புதிய பிரதிநிதி மற்றும் வதிவிட பணிப்பாளர் தனது தகுதிச் சான்றுகளைச் சமர்ப்பித்தார்

Aug 19, 2025 - 12:18 PM -

0

வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கைக்கான WFP யின் புதிய பிரதிநிதி மற்றும் வதிவிட பணிப்பாளர் தனது தகுதிச் சான்றுகளைச் சமர்ப்பித்தார்

கொழும்பு – ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) யின் இலங்கைக்கான புதிய பிரதிநிதி மற்றும் வதிவிட பணிப்பாளர் திரு. பிலிப் வார்ட், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கௌரவ. திரு. விஜித ஹேரத் அவர்களிடம், தனது தகுதிச் சான்றுகளை, அமைச்சின் அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பித்தார். அமைச்சர் திரு. ஹேரத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், இலங்கையின் உணவு முறைகளை வலுப்படுத்துதல், போஷாக்கை மேம்படுத்துதல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரிடையே தாக்குப் பிடிக்கும் ஆற்றலை உருவாக்குதல் போன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான உலக உணவுத் திட்டத்தின் உறுதிப்பாட்டை வார்ட் மீண்டும் உறுதிப்படுத்தினார். 

இலங்கையானது, உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின் முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியான சவால்களைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில், இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன், என்று வதிவிட பணிப்பாளர் திரு. வார்ட் கூறினார். மேலும், தேசிய முயற்சிகளுக்கு WFP தனது ஆதரவில் உறுதியாக உள்ளது, குறிப்பாக மிகவும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு சத்தான உணவை அணுகுவதை உறுதி செய்வதற்காக கூட்டாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வதிவிட பணிப்பாளர் வார்ட் மற்றும் அமைச்சர் ஹேரத் ஆகியோர் உலக உணவுத் திட்டத்தின் நாட்டுக்கான மூலோபாயத் திட்டம், இலங்கையின் போசாக்கின்மையைக் குறைத்தல் மற்றும் காலநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் முகப்பில் சமூகத்தின் தாக்குப் பிடிக்கும் ஆற்றலை வலுப்படுத்துதல் குறித்து கலந்துரையாடினர். மீட்சியின் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையின் பாதையில் யாரும் பின்தங்கிவிடாமல் இருக்க, ஒரு நம்பிக்கைக்குரிய பங்காளியாக உலக உணவுத் திட்டத்தின் பங்கை திரு. வார்ட் வலியுறுத்தினார். 

திரு. பிலிப் வார்ட், மனிதாபிமான மற்றும் அபிவிருத்திப் பணிகளில் உலக உணவுத் திட்டத்துடன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர். இதில் அவசரகால மற்றும் மூலோபாயச் சூழல்களில் மூத்த தலைமைப் பதவிகளும் அடங்கும். மிக அண்மையில், அவர் ரோமில் உள்ள நிர்வாகச் சபையின் செயலாளராகவும், நிர்வாகச் சபையின் செயலகப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். அங்கு உலகின் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பின் நிர்வாகத்திற்கு வசதியளிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். களச் செயற்பாடுகள், மூலோபாயப் பங்காளர் மற்றும் நிறுவனத் தலைமை ஆகிய இரண்டிலும் வலுவான பின்னணியைக் கொண்ட திரு. வார்ட், புதுப்பிக்கப்பட்ட கவனம் மற்றும் பார்வையுடன் இலங்கையில் உலக உணவுத் திட்டத்தின் முயற்சிகளை வழிநடத்த நல்ல நிலையில் உள்ளார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title