Header Logo

உலகம்
ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்தில் 73 பேர் பலி

Aug 20, 2025 - 11:25 AM -

0

ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்தில் 73 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 

அவர்களில் 17 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிய அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானதாக தலிபான் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது. 

காபூலுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஹெராத் மாகாணத்தில் ஒரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீப்பற்றுதலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

பேருந்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும், விபத்துக்குள்ளான ஏனைய வாகனங்களில் பயணித்த இருவரும் சம்பவத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

உள்நாட்டு மோதல் காரணமாக தாய் நாட்டில் இருந்து தப்பிச் சென்ற ஆவணமற்ற ஆப்கானிய குடியேறிகளை நாடு கடத்துவதை ஈரான் முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title