Aug 27, 2025 - 04:41 PM -
0
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இன்று (27) ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தோல் புற்று நோய் என்பது உண்மையான ஒன்று. இன்று எனது மூக்கில் இருந்த கேன்சரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கி இருக்கிறார்கள். நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
உங்களுடைய தோல்களையும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்னுடைய விஷயத்தில், நோய் வருவதற்கு முன்பே காத்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்ததாக உள்ளது. நான் தொடர்ந்து சிகிச்சைகள் எடுத்து வருகின்றேன். ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கின்றது.
என்னுடைய மருத்துவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அகற்றி விட்டார்கள் என்று கிளார்க் கூறியுள்ளார்.
கிளார்க், 115 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8,643 ஓட்டங்களை பெற்று இருக்கிறார். இதில் 28 சதம் அடங்கும். இதேபோன்று 245 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7,981 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்று அவுஸ்திரேலிய அணிக்கு உலக கிண்ணத்தை வென்று கொடுத்தார். 2015 ஆஷஸ் தொடருக்கு பிறகு கிளார்க் ஓய்வெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.