Header Logo

மலையகம்
சீதாஎலிய ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!

Aug 28, 2025 - 11:22 PM -

0

சீதாஎலிய ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் இன்று (28) காலை நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சீதாஎலிய ஸ்ரீ சீதை அம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார். 

பிரித்தானிய அரசாங்கத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான உறவுகள் மூலம் மலையக மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும், நுவரெலியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கருத்துக்களைப் பெறவும் நுவரெலியா மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தபோது, அவர் ஆசீர்வாதம் பெற சீதாஎலிய ஸ்ரீ சீதை அம்மன் கோவிலுக்கும் சென்றார். 

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக், 

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழுவின் செயலாளர் சிவா குணசேகரம் ஆகியோர் வரவேற்றனர், மேலும் சிறப்பு ஆசீர்வாத பூஜையில் பங்கேற்க அழைத்தனர் என தெரிவித்தார். 

பூஜையைத் தொடர்ந்து, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கோயிலின் வரலாறு, தொன்மை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு வந்திருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார். 

அதன் பின்னர், கோயிலுக்கு வருகை தரும் இராஜதந்திரிகளின் குறிப்பேட்டில் உயர்ஸ்தானிகர் ஒரு சிறப்பு குறிப்பை எழுதினார், மேலும் சீதாஎலிய ஸ்ரீ சீதை அம்மன் கோயிலுக்கு வருகை தரும் இராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு நினைவுப் பரிசை கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சிவா குணசேகரன் ஆகியோர் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வழங்கினர்.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title