Header Logo

உலகம்
ட்ரம்பின் வரி விதிப்பு சட்டவிரோதமானவை என நீதிமன்றம் தீர்ப்பு

Aug 30, 2025 - 11:10 AM -

0

ட்ரம்பின் வரி விதிப்பு சட்டவிரோதமானவை என நீதிமன்றம் தீர்ப்பு

உலக நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகள் சட்டவிரோதமானவை என அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார். இந்த வரி விதிப்பு கடந்த 27ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்த மனுவை விசாரித்த அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க ட்ரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது. 

தேசிய அவசர நிலையை அறிவிக்கவோ, அல்லது உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் வரிகளை விதிக்கவோ டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த உத்தரவின் மூலம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த வரிகள் ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இருப்பினும், அனைத்து வரிகளும் தொடர்ந்து அமலில் உள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீ்திமன்றில் மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும், அமெரிக்கா இறுதியில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title