Aug 30, 2025 - 04:20 PM -
0
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கு முன்னதாக அணியின் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயணத்தில் பல ஆண்டுகளாக முக்கிய நபராக இருந்து வரும் டிராவிட், வீரர்களை வடிவமைத்து, அணிக்குள் வலுவான மதிப்புகளை ஏற்படுத்தி, அணியின் கலாச்சாரத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
அண்மையில் அணி அவருக்கு பெரிய பதவியை வழங்கிய போதிலும் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து, டிராவிட்டின் சேவைக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.