Sep 2, 2025 - 02:40 PM -
0
ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடமாடிய நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று கேரளாவில் பதிவாகியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பத்தேரியைச் சேர்ந்தவர் ஜுனைஸ் அப்துல்லா. இவருக்கு வயது 46. இவர் முன்னாள் எம்.எல்.ஏ பி.வி. அன்வரின் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகை ஓகஸ்ட் 26 ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 5 திகதி வரை சுமார் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், திருவனந்தபுரத்தில் கேரள சட்டமன்றத்தால் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது அரசு ஊழியர்கள் கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து மேடையில் சுமார் 10 பேர் நடனமாடினர்.
அதில்,முன்னாள் எம்.எல்.ஏ பி.வி. அன்வரின் முன்னாள் உதவியாளருமான ஜுனைஸ் அப்துல்லாவும் நடனமாடினார். அப்போது சக ஊழியர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது ஜுனைஸ் அப்துல்லா மயங்கி விழுந்துள்ளார்.
மேலும் சிறிது நேரத்தில் எழுந்துவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எழவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந் த சக ஊழியர்கள் அவரை மீட்டு உடனடியாக திருவனந்தப்புரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஜுனைஸ் அப்துல்லாவிலை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் கதறிய அழுதனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவனந்தபுரம் பொலிஸார் ஜுனைஸ் அப்துல்லா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைகாக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் வெளியாகி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.