Header Logo
Mogo Academy

ஏனையவை
'பிரதீபா' தேசிய மட்ட சித்திர போட்டியில் கலைஞர் அனல் தெரிவு

Sep 3, 2025 - 10:41 AM -

0

'பிரதீபா' தேசிய மட்ட சித்திர போட்டியில் கலைஞர் அனல் தெரிவு
Mobitel inner

புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான 'பிரதீபா' அகில இலங்கை சித்திரப் போட்டியானது கடந்த 24 ஆம் திகதி கொழும்பு கடவத்த ஜனாதிபதி வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் அண்மையில் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மட் / பட் / துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் ஓவிய ஆசிரியரும், கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் ஓவிய வளவாளருமான கலைஞர்.ஏ.ஓ. அனல் தேசிய மட்டத்தில் 'திறமைச் சான்றிதழுக்கு' தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இவர் சென்ற வருடம் (2024) அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்திருந்தமை சிறப்புக்குரியது. 

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி திருமதி. சர்மிளா சபேசனின் வழிகாட்டலின் கீழ் வருடந்தோறும் மாணவர்கள் மற்றும் வளவாளர்கள் சித்திரப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara