Header Logo
SLIC
Rhythams of Lanka
ஏனையவை
'பிரதீபா' தேசிய மட்ட சித்திர போட்டியில் கலைஞர் அனல் தெரிவு

Sep 3, 2025 - 10:41 AM

'பிரதீபா' தேசிய மட்ட சித்திர போட்டியில் கலைஞர் அனல் தெரிவு
Mobitel inner

புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான 'பிரதீபா' அகில இலங்கை சித்திரப் போட்டியானது கடந்த 24 ஆம் திகதி கொழும்பு கடவத்த ஜனாதிபதி வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் அண்மையில் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மட் / பட் / துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் ஓவிய ஆசிரியரும், கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் ஓவிய வளவாளருமான கலைஞர்.ஏ.ஓ. அனல் தேசிய மட்டத்தில் 'திறமைச் சான்றிதழுக்கு' தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இவர் சென்ற வருடம் (2024) அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்திருந்தமை சிறப்புக்குரியது. 

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி திருமதி. சர்மிளா சபேசனின் வழிகாட்டலின் கீழ் வருடந்தோறும் மாணவர்கள் மற்றும் வளவாளர்கள் சித்திரப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

Mobitel Upahara