Sep 8, 2025 - 10:20 AM -
0
இலங்கையின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து உறுதி செய்யும் வகையில், CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின், இலங்கையின் முதல் தர சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரியினால், தொடர்ச்சியான 17 ஆவது வருடமாக, 36 ஆவது கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த போட்டித் தொடர், இலங்கை விமானப் படை விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்றதுடன், இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 350 க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். 13 வயதுக்குட்பட்ட, 15 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றதுடன், இலங்கையின் வளர்ந்து வரும் ஸ்கொஷ் திறமைசாலிகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா ஸ்கொஷ் தலைவர் எரந்த கீகனகே கருத்துத் தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா ஸ்கொஷ்ஷை பொறுத்தமட்டில், இந்த சம்பியன்ஷிப் என்பது, எமது நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகும். இதனூடாக, நாட்டின் எதிர்கால திறமைசாலிகள் வெளிக்கொணரப்படுகின்றனர். கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் உடன் பிரதான அனுசரணையாளராக 17 வருடங்களாக இணைந்துள்ளமைக்காக ரிட்ஸ்பரிக்கு நன்றி தெரிவிக்கிறோம். விளையாட்டை மேம்படுத்துவது மற்றும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு அவசியமான ஆதரவை வழங்குவதில் அவர்களின் நீண்ட கால ஆதரவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.” என்றார்.
19 வயதுக்குட்பட்ட இறுதிப் போட்டியில், பெண்கள் பிரிவில் நெத்மி விக்ரமசிங்க ஐந்து-செட் போட்டியில் (3-2) எனும் அடிப்படையில் வெற்றியீட்டியிருந்தார். ஆண்கள் பிரிவில், மதீஷ விஜேசேகர, 3-0 எனும் அடிப்படையில் வெற்றியீட்டியிருந்தார். வளர்ந்து வரும் போட்டியாளர்களையும் இந்தப் போட்டித் தொடர் இனங்கண்டிருந்தது. 2025 ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீராங்கனையாக சனுமி தெபுவன தெரிவாகியதுடன், 15 வயதுக்குட்பட்ட சம்பியன் பட்டத்தையும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 4ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டார். ஆண்கள் பிரிவில் 2025 ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரராக கெமித ஹபுஆரச்சி தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாமிடத்தையும், 19 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் 4ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுக்ஷா பெஸ்டியன்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் இளைஞர்களுக்கு வலுவூட்டுவதில் ரிட்ஸ்பரியைச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், சுமார் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக ஸ்கொஷ் எமது பிரதான அங்கமாக அமைந்துள்ளது. பெருமளவு ஈடுபாட்டுடன் இளம் மெய்வல்லுனர்கள் போட்டியிடுவதை காண்பதனூடாக, ஒவ்வொரு வருடமும் இந்தப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க எம்மை தூண்டுகின்றது.” என்றார்.
ரி்ட்ஸ்பரியை பொறுத்தமட்டில், விளையாட்டு என்பது வெற்றிக் கிண்ணங்களுக்கு அப்பாற்பட்டது. அடுத்த தலைமுறை சம்பியன்களை வடிவமைக்கும் அதே வேளையில், ஒழுக்கம், சகிப்புத்தன்மை மற்றும் மீள்தன்மையை ஊக்குவிக்கும் ஒரு தளமாக ரிட்ஸ்பரி இதை கருதுகிறது. ஜூனியர் ஸ்குவாஷுக்கு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அளிக்கப்படும் ஆதரவோடு, ரிட்ஸ்பரி சேர் ஜோன் டார்பட் தடகள சம்பியன்ஷிப், ரிட்ஸ்பரி ரக்பி கார்னிவல், ரிட்ஸ்பரி நீச்சல் சம்பியன்ஷிப், ரிட்ஸ்பரி டென்னிஸ் சம்பியன்ஷிப் மற்றும் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்க நிதி உதவி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட அதன் சொந்த மவ்பிமட வீரயெக் திட்டம் போன்ற முயற்சிகள் மூலம் ரிட்ஸ்பரி இலங்கையில் விளையாட்டுகளை வளர்த்து தரத்தை உயர்த்துவதுடன், நாடு முழுவதும் தடகள வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

