வடக்கு
போதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது!

Sep 9, 2025 - 10:09 AM -

0

போதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்குபிட்டி பகுதியல் சாவகச்சேரி பொலிஸார் நேற்று (08) மதியம் மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

முத்துராஐவெல பகுதியில் இருந்து யாழிற்கு எரிபொருள் ஏற்றிவந்த எரிபொருள் தாங்கியினை யாழ். மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையாக சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து ஐஸ், கஞ்சா மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்திய நிலையில் சாரதி ஐஸ் மற்றும் கஞ்சா பயன்படுத்திய நிலையில் வாகனத்தை செலுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட நபரை இன்று (09) சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கையில் சாவகச்சேரி பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05