Header Logo

மலையகம்
அவமானத்தால் உயிரை மாய்த்துகொண்ட இளைஞன்!

Sep 10, 2025 - 05:09 PM -

0

அவமானத்தால் உயிரை மாய்த்துகொண்ட இளைஞன்!

நள்ளிரவில் வழிதவறிச் சென்ற இளைஞனை திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் தாக்கி அதனை வீடியோவாக வெளியிட்டமையால் மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதன்போது புஸ்ஸல்லாவ ரொச்சைட் தோட்டம் வை.ஆர்.சீ பிரிவைச் சேர்ந்த இராமச்சந்திரன் புவனேஸ்வரன் (முரளி) என்ற 34 வயது இளைஞனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துகொன்டவராவர். 

கொழும்பில் வேலை செய்து வந்த குறித்த இளைஞன் சம்பவதினமான 6 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து வெலிமட செல்லும் தனியார் பஸ்ஸில் வந்துள்ளதுடன் நித்திரை கொண்டமையால் புஸ்ஸல்லாவையில் இறங்க முடியாமல் போயுள்ளது. 

பின்னர் இறம்பொடை பிரதேசத்தில் வைத்து விழித்துகொண்டு இறங்கியுள்ளார், இரவு 2 மணி என்பதால் புஸ்ஸல்லாவைக்கு போக பஸ் இல்லாமையால் இறம்பொட பிரதேசத்தில் தனது உறவினரின் வீட்டிற்கு சென்ற போது வழிதவறி பிரிதொரு வீட்டின் கதவினை தட்டியதாக தெரியவருகிறது. 

இதன்போது அவ்வீட்டில் உள்ளவர்கள் திருடன் வந்துவிட்டதாக சத்தமிடவே பிரதேசவாசிகள் இணைந்து தாக்கி வீடியோ பதிவு செய்துவிட்டு கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த நபர் நிரபராதி என தெரியவரவே விடுவித்துள்ளனர். எனினும் தன்னை தாக்கி அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமையால் பெரிதும் மன உளைச்சலுடன் காணப்பட்ட குறித்த இளைஞன் அவமானத்தை தாங்கிகொள்ள முடியாமல் உயிரை மாய்த்துகொண்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு கடந்த 08 ஆம் திகதி பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

--


MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title