Header Logo
SLIC
விளையாட்டு
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு - கொடும்பாவியும் எரிப்பு

Sep 13, 2025 - 05:16 PM

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு - கொடும்பாவியும் எரிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

ஆசிய கிண்ணத்தில் நாளை (14) இடம்பெறவுள்ள பரபரப்பான போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

இந்தியாவின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. 

குறித்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என இந்தியா குற்றஞ் சுமத்திய நிலையில், பாகிஸ்தான் மீது நேரடி தாக்குதல்களும் இந்தியாவினால் நடத்தப்பட்டிருந்தன. 

இதனால் பிராந்திய மட்டத்தில் பாரிய அமைதின்மை ஏற்பட்ட நிலையில், பின்னர் இரண்டு நாடுகளும் தாக்குதல்களை இடை நிறுத்தியிருந்தன. 

குறித்த சம்பவம் இடம்பெற்று 5 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் மீண்டும் அரசியல் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா (UBT) மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP)ஆகியன இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. 

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்னும் துயரத்தில் இருந்து இதுவரை மீளாத நிலையில் இந்தப் போட்டியை இந்தியா புறக்கணித்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. 

அத்துடன் இது முழுமையான பணம் ஈட்டும் நோக்கிலேயே நடத்தப்படுவதாகவும், அதனை இந்தியாவில் நேரலை செய்யும் உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் உடை அணிந்திருக்கும் உருவ பொம்மை ஒன்று எரிக்கப்படும் காட்சி வௌியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் நாளை போட்டி இடம்பெறும் பகுதிகளில் பாரிய பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ
02
 தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர் தலைவர்களை வரவேற்று, 2026-ஆம் ஆண்டிற்கான SEARIC உச்சிமாநாட்டை இலங்கை முதன்முறையாக நடத்த

தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர் தலைவர்களை வரவேற்று, 2026-ஆம் ஆண்டிற்கான SEARIC உச்சிமாநாட்டை இலங்கை முதன்முறையாக நடத்த

Aug 24, 2026 - 11:52 AM


காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278