Header Logo

மலையகம்
இளைஞனின் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டம்!

Sep 16, 2025 - 07:16 PM -

0

இளைஞனின் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டம்!

புஸ்ஸல்லாவ ரொச்சைட் தோட்டம் வை.ஆர்.சீ பிரிவைச் சேர்ந்த இராமச்சந்திரன் புவனேஸ்வரன் (முரளி) என்ற 34 வயது இளைஞனின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 

நள்ளிரவில் வழிதவறிச் சென்ற இளைஞனை திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் தாக்கி அதனை வீடியோவாக வெளியிட்டமையால் மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி ரொச்சைல்ட் தோட்டப் பகுதியில் இருந்து கொத்மலைக்கு வந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம் இடம்பெற்ற பிரதேச செயலக வளாகத்துக்கு கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்நாயக்க வருகை தந்திருந்தார். போராட்டக்காரர்களுடன் கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலந்துரையாடிய பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

title