Sep 16, 2025 - 08:04 PM -
0
தெலுங்கானா மாநிலத்தில் ஹனிடிராப் எப் மூலம் தற்போது பெண்களை வைத்து மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிக்கும் நூதன மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.
இது மட்டுமின்றி வட்ஸ்எப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை வைத்து இந்த கும்பல் வசதி படைத்த திருமணமான ஆண்களுக்கு வலை வீசுகின்றனர்.
சபல புத்தியால் ஏமாறும் ஆண்களை இளம்பெண்கள் ஹோட்டல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு நெருக்கமாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மறைமுகமாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் படம் எடுக்கின்றனர்.
பின்னர் அந்த படங்களை காட்டி மிரட்டி இளம்பெண்கள் அப்பாவி போல நடித்து அழுது புலம்பி பணம் பறிக்கின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் இந்த ஆண்களுடன் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.
செகந்திராபாத்தை சேர்ந்த யோகா குரு என்பவரை இளம்பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் யோகா குருவை ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து இருவரும் நெருக்கமாக இருந்தனர். அப்போது இரகசிய கெமரா மூலம் அதனை படம்பிடித்தனர்.
ஹோட்டலில் தனிமையில் இருந்த போது யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தனது கணவருக்கு தெரிந்தால் தன்னை கொன்று விடுவார் எனக் கூறி அந்த இளம்பெண் கதறி அழுதார். இதனை நம்பி யோகா குரு ரூ.26 இலட்சம் கொடுத்தார். அதனை பறித்துக் கொண்டு இளம்பெண் தலைமறைவாகிவிட்டார்.
இதே போல அரசு ஊழியர் ஒருவர் ஹனி டிராப் டேட்டிங் எப்பில் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டார். அந்த இளம்பெண் அவருடன் நீண்ட நாட்கள் தகவல்களை பரிமாறினார். பின்னர் இருவரும் ஒரு ஓட்டல் அறைக்கு சென்றனர்.
அங்கு வைத்து அரசு ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு இளம்பெண் தப்பி சென்று விட்டார்.
இதேபோல பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் லிப்ட் கேட்பது போலவும் இளம்பெண்கள் ஆண்களை மயக்கி அவர்களை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இதுவரை தெலுங்கானா மாநிலத்தில் 160 பேரை ஹனிடிராப் எப் மூலம் ஹோட்டல் அறைகளுக்கு அழைத்து சென்று நிர்வாண படம் எடுத்து மிரட்டி ரூ.3 கோடி வரை பறிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே முறைப்பாடு அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு அளித்தால் அவர்களுடைய விபரங்கள் பாதுகாக்கப்படும். அதனால் தைரியமாக வந்து முறைப்பாடு அளிக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹனிடிராப், மேட்ரிமோனி டேட்டிங், ஓரினச்சேர்க்கை எப் மற்றும் சமூக ஊடகங்களில் சபல புத்தி கொண்டவர்கள் இணைகிறார்கள். அவர்களை கவர்ந்து இழுத்து நிர்வாணமாக வீடியோ எடுக்கிறார்கள்.
இளம்பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் எடுத்து பணம் பறிக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.