Sep 18, 2025 - 03:08 PM -
0
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றின் சூட்சுமமான முறையில் மலக்குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 240 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக தர்மாபுரம் பொலிஸார் இன்று (18) சோதனை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
--