Sep 18, 2025 - 11:03 PM -
0
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் 24ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
--