Oct 2, 2025 - 12:54 PM -
0
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு மீது, சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டமை குறித்து, ஆணைக்குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவை இழிவுபடுத்தும் அல்லது தவறான அறிக்கைகளை வெளியிடும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம் என ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.