Header Logo

மலையகம்
தாஜூதீனின் மரணம் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை

Oct 3, 2025 - 01:28 PM -

0

தாஜூதீனின் மரணம் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை

தாஜூதீனின் மரணம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த மரணத்தில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்தக் கொலையுடன் கூடிய சம்பவத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

நேற்று (02) ஹட்டன் பகுதியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், 

"நாட்டில் இடம்பெற்ற ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக சட்டப்படியான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை எமது அரசாங்கம் வழங்கும். ஆகவே, இதில் நாமல் மட்டுமல்ல, வேறு எவராக இருந்தாலும் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை." 

"எமது அரசாங்கத்தில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், அவற்றைத் திருத்தி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம். எமது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது என்பது கடினமான விடயமாகும். நாம் கொண்டு வந்துள்ள புதிய சட்டமூலம், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல. பாடசாலைகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உள்ளது. அது ஒரு நல்ல விடயமாகவே நாம் கருதுகிறோம்," என தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!