Header Logo
உலகம்
காசா அமைதி திட்ட ரகசிய பேச்சு ஆரம்பம்

Oct 7, 2025 - 08:54 AM

காசா அமைதி திட்ட ரகசிய பேச்சு ஆரம்பம்
Mobitel inner

காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்க அமைதித் திட்டம் குறித்த இறுதி உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட ரகசிய பேச்சுவார்த்தைகள் இன்று (7) எகிப்திய நகரமான ஷார்ம் எல்-ஷேக்கில் ஆரம்பமாகியுள்ளது. 

பாலஸ்தீன மற்றும் எகிப்திய அதிகாரிகள் இந்த அமர்வுகளின் போக்கு தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளனர். 

இதன் மூலம் பல பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்க ப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விரைவாக அமைதித் திட்டத்திற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார். 

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் பணயக் கைதிகளின் விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். 

வரவிருக்கும் நாட்களில்" பணயக்கைதிகளை விடுவிப்பதை அறிவிப்பேன் என்று இஸ்ரேலின் பிரதமர் சனிக்கிழமை தெரிவித்தார். 

இதனடிப்படையில் காசா அமைதி திட்டம் தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. 

20 நிபந்தனைகளுடன் இஸ்ரேல் - பாலஸ்த்தீன போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது. 

இந்த அமைதி திட்டத்திற்கு இருதரப்பினரும் தங்களது இணக்கப்பாட்டை வௌிப்படுத்தியுள்ள நிலையில், அதனை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara