Aug 30, 2026 - 08:05 PM





இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி வளர்ச்சி 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுட்டிக்காட்டுகின்றார்.
தெங்கு சார்ந்த உற்பத்திகள் 42 சதவீதமும், பழங்கள் 21 சதவீதமும், காய்கறிகள் 20 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
எதிர்காலத்தில் நாட்டில் விவசாயத் துறைக்காக அதிகளவில் முதலீடுகள் இடம்பெறும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுட்டிக்காட்டுகின்றார்.
இதன்போது இயற்கை (சேதன) உற்பத்திகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.























