Oct 7, 2025 - 10:11 PM -
0
இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து சிக்கியதில் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் சேற்று மற்றும் பாறைகளின் கீழ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்தூட்டா துணைவட்டத்தின் பலூகாட் (பல்லூ புல்) பகுதியில், மாரோடான்-கலால் வழித்தடத்தில் இயங்கிய பேருந்து மீது மாலை 6:25 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
பேருந்தில் சுமார் 25-30 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது.
மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பொலிஸ், தீயணைப்பு பிரிவு, பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் NDRF குழுக்கள் இடத்தைச் சேர்ந்துள்ளனர்.
JCB இயந்திரங்கள் மூலம் சேற்றை அகற்றும் பணிகள் தொடர்கின்றன.