Header Logo

கிழக்கு
ஐஸ் மற்றும் ஹெரோயின் விநியோகித்த சந்தேக நபர் கைது

Oct 9, 2025 - 02:18 PM -

0

ஐஸ் மற்றும் ஹெரோயின் விநியோகித்த சந்தேக நபர் கைது

அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர், நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை விநியோகித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

அம்பாறை தலைமையக பொலிஸ் பிரதான பரிசோதகர் அசேல கே ஹேரத்தின் மேற்பார்வையில், கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

ஆரம்ப விசாரணைகளில், கைதான சந்தேக நபர் துபாயில் இருந்து இயங்கும் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின்படி, அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் வழிகாட்டுதலில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title