Header Logo

வடக்கு
பொதுமக்களது பங்களிப்பு கிடைக்கப்பெற்றால் முழுமையான இலக்கை எட்ட முடியும்

Oct 12, 2025 - 01:51 PM -

0

பொதுமக்களது பங்களிப்பு கிடைக்கப்பெற்றால் முழுமையான இலக்கை எட்ட முடியும்

போதைப்பொருள் கட்டுப்படுத்தலில் கடற்படை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை மட்டுமே செய்யமுடியும் என சுட்டிக்காட்டிய இலங்கை கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் புத்திக லியனகமகே பொதுமக்களது பங்களிப்பும் எமக்கு கிடைக்கப் பெற்றால் முழுமையான இலக்கை எட்ட முடியும் என்றும் தெரிவித்தார். 

கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்தில் இன்று (12) மேற்கொண்ட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு கடல் மார்க்கமாக போதைபொருள் கடத்தல் இடம்பெற்றுவருவது குறித்து நாம் அதிக அக்கறை செலுத்தி மேற்கொண்ட முயற்சிகளால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னுன் பல நூறு கிலோ போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. குறித்த குற்றத்துடன் தொடர்புடைய பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டும் உள்ளனர். 

இதே நேரம் கடற்படை ஒரு பிரதேசத்துக்கானதல்ல. அது நாடு முழுவதுக்குமான ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பு. 

இலங்கைத் தீவின் அனைத்து கடற்பரப்பினதும் பாதுகாப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை நாம் முடியுமானவரை திறன்பட செய்துவருகின்றோம். 

கடற்படைக்கு உள் நாடு புலனாய்வு கட்டமைப்பின் தகவல் மடுமல்லாது சர்வதேச புலன் தகவல்களும் கிடைக்கப்பெற்று துரித நடவடிக்கை எடுக்கின்றது. ஆனாலும் எமக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் அவசியம். 

அந்தவகையில் எமக்கு கிடைக்கின்ற தகவல்களுடன் மக்களாகிய நீங்களும் தகவல்களை வழங்கி குறித்த செயலில் ஈடுபடும் தரப்பையும் அவர்களது கட்டமைப்பையும் இல்லாதொழித்து போதைப்பொருள் அபாயத்திலிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title