Oct 13, 2025 - 08:02 PM -
0
புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையான புதிய பாடசாலை கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால், 08 கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமருமளவு மண்டபம் உள்ளிட்ட வகுப்பறைகள் அடங்கியவையாகும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் பைஷல், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான தாஹீர், புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டவர்களுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.