Header Logo

கிழக்கு
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் நீதிமன்ற உத்தரவுடன் அழிக்கப்பட்டன!

Oct 14, 2025 - 04:12 PM -

0

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் நீதிமன்ற உத்தரவுடன் அழிக்கப்பட்டன!

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை இன்று (14) நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினர் வெடிக்க வைத்து அழித்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த வயலில், கடந்த 11 ஆம் திகதி வேளாண்மை நடவடிக்கைகளுக்காக வயலின் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் நிலத்தைப் பண்படுத்தும்போது, நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களைக் கண்டறிந்து பொலிஸாருக்கு அறிவித்தார். 

இதையடுத்து, பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழப்பு பிரிவை வரவழைத்து, புதைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் குண்டுகள், ஒரு ஆர்.பி.ஜி. குண்டு, மற்றும் பிளாஸ்டிக் கலனொன்றில் இருந்த ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை மீட்டனர். 

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்களை நீதிமன்ற உத்தரவு பெற்று, விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் வெடிக்க வைத்து அழித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title