Oct 17, 2025 - 01:26 PM -
0
இலங்கையின் யாழ்ப்பாண அரசு கால மரபுரிமை சின்னமான நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனையின் பாதுகாப்பு பணிகள் நேற்று (17) ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் இவ் மந்திரிமனை மழை காரணமாக பகுதியளவில் இடிந்து வீழ்ந்திருந்தால், இதன் பாதுகாப்பு கருதி மந்திரிமனையின் சேதமடைந்த வாயிற் புற கூரை கழற்றி மழைக்கால சேதத்தினை தடுப்பதற்கான வேலைகள் இடம்பெற்றுவருகின்றன.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து குறித்த பாதுகாப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
--

