வடக்கு
மணியந்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Oct 19, 2025 - 01:26 PM -

0

மணியந்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் யாழ். மணியந்தோட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்ட்ள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05