Header Logo

கிழக்கு
தனிமையில் வசித்த பெண் யானை தாக்கி பலி

Oct 21, 2025 - 03:19 PM -

0

தனிமையில் வசித்த பெண் யானை தாக்கி பலி

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்சேனை வாதகல்மடு பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பன்சேனை வாதகல்மடுவைச் சேர்ந்த 58 வயதான 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் தகரத்தினால் அமைத்த வீட்டில் தனியாக சம்பவ தினமான அதிகாலை 2.00 மணியளவில் நித்திரையில் இருந்துள்ள நிலையில் வீட்டில் இருந்த நெல்லை உண்பதற்காக காட்டு யானை வந்த சத்தத்தை கேட்டு எழும்பி வீட்டை விட்டு வெளியே தப்பி ஓடியுள்ளார். 

இதன்போது யானை அவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை யானை தாக்கி இறந்தமைக்கான பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தனின் அறிவுறுத்தலின் பிரகாரம் முதல்கட்டமாக மரண சடங்கிற்காக ஒரு இலச்சம் ரூபாய் காசோலையை உயிரிழந்தவரின் மகனிடம் கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title