Header Logo

கிழக்கு
தனிமையில் வசித்த பெண் யானை தாக்கி பலி

Oct 21, 2025 - 03:19 PM -

0

தனிமையில் வசித்த பெண் யானை தாக்கி பலி

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்சேனை வாதகல்மடு பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பன்சேனை வாதகல்மடுவைச் சேர்ந்த 58 வயதான 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் தகரத்தினால் அமைத்த வீட்டில் தனியாக சம்பவ தினமான அதிகாலை 2.00 மணியளவில் நித்திரையில் இருந்துள்ள நிலையில் வீட்டில் இருந்த நெல்லை உண்பதற்காக காட்டு யானை வந்த சத்தத்தை கேட்டு எழும்பி வீட்டை விட்டு வெளியே தப்பி ஓடியுள்ளார். 

இதன்போது யானை அவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை யானை தாக்கி இறந்தமைக்கான பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தனின் அறிவுறுத்தலின் பிரகாரம் முதல்கட்டமாக மரண சடங்கிற்காக ஒரு இலச்சம் ரூபாய் காசோலையை உயிரிழந்தவரின் மகனிடம் கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title