Oct 23, 2025 - 01:03 PM -
0
யாழில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த47 வயதான நபரே நேற்று (22) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்று காணப்படுகின்றன.
தனது வாயினால் மின்சார ஆழி குதையினுள் மின் இணைப்புக்காக வயரினை சொருக முற்படுட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
--

