Oct 24, 2025 - 11:36 AM -
0
அடுத்த ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சாய்ராஜ் பஹுதுல்வை சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சுனில் ஜோஷி, சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அவர், நீக்கப்பட்டு 52 வயதான சாய்ராஜ் பஹுதுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

