Header Logo
Mogo Academy

கிழக்கு
மட்டக்களப்பில் மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதம்!

Oct 24, 2025 - 06:22 PM -

0

மட்டக்களப்பில் மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதம்!
Mobitel inner

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (24) மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்துவீழ்ந்ததன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மண்முனை வடக்கு, ஏறாவூர் நகர், ஏறாவூர்ப்பற்று, போரதீவுப்பற்று செயலகப்பிரிவுகள் அடங்களாக பல இடங்களில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று மாலை பலத்த காற்றுடன் மழைபெய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதன்போது கடுமையான காற்று காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் வீழ்ந்ததன் காரணமாக வீதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளன. 

ஆரையம்பதியில் உள்ள மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு அருகிலிருந்த மைதான ஸ்ரேடியம் காற்றினால் தற்றப்பட்டு ஆரையம்பதி வாகன தரப்பிடத்திற்கு மேல் விழுந்த காரணத்தினால் வாகன தரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் செந்தில் தெரிவித்தார். 

இதேபோன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதூர், சேத்துக்குடா போன்ற பகுதிகளில் வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும் வீதிகளில் மரம்முறிந்துவீழ்ந்துள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன. 

அத்துடன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வீடுகள் சேதடைந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பாலைச்சோலை மற்றும் மைலம்பாவெளி, சிவபுரம் ஆகிய பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 

இது தொடர்பான சேதவிபரங்களை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

இதேவேளைமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 19.2 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara