Nov 7, 2025 - 09:31 PM -
0
UPDATE -
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 41 வயதுடைய நபர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
…………………….
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

